வடமராட்சி கிழக்கில் 150 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்!

You are currently viewing வடமராட்சி கிழக்கில் 150 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்!

புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியில் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேவில் வெற்றிலைகேணி ஆழியவளை உடுத்துறை வத்திராயன் மருதங்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 150 பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் கடந்த 07.04.2020 அன்று வழங்கப்பட்டது. நாளாந்த கூலி வேலை செய்யும் குடும்பங்கள் மற்றும் சீவல் தொழில் செய்யும் குடும்பங்கள் மற்றும் மீன்பிடி தொழில் இன்மையால் பாதிக்கப்பட்டு மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

மேற்படி உதவியை வழங்குவதற்கான நிதி உதவியை வழங்கிய புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் இவ் உதவியை பெற்றுத் தந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பெர்னனம்பலம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பகிர்ந்துகொள்ள