வட்டுக்கோட்டையில் வீட்டுக்குள் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்பு!

You are currently viewing வட்டுக்கோட்டையில் வீட்டுக்குள் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்பு!

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சடலங்களாக மீட்கப்பட்டவர்களில், 76 வயதுடைய ஒருவரும் மற்றையவர் 73 வயதுடையவர் என்றும் சிறீலங்கா காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் உயிரிழந்துள்ளார். மற்றையவர் இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருவர் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி இல்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments