வவுனியாவில் அடிதடியில் இறங்கிய ஈபிடிபி எம்.பி!

You are currently viewing வவுனியாவில் அடிதடியில் இறங்கிய ஈபிடிபி எம்.பி!

வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுடன் சென்ற குழுவினருக்கும், மற்றொரு தரப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலால் வவுனியா – வைரவபுளியங்குளம் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதி கலவரபூமியாக மாறியது.

வவுனியா – வைரபுளியங்குளம் பகுதியில் கடந்த இரு தினங்களாக இளைஞர் குளுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக அடிதடி சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளதுடன், அதன் தொடர்ச்சியாக நேற்று குறித்த பகுதியில் அதிகளவான இளைஞர்கள் குழுமியிருந்தனர்.

இதனையடுத்து அந்த பகுதிக்கு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தனது சகாக்களுடன் சென்றுள்ளார். இதன்போது இளைஞர்கள் சிலருக்கும் அவர்களுக்கும் இடையில் முரன்பாடு ஏற்பட்டதுடன், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

சற்றுநேரத்தில் குறித்த பகுதிக்கு வந்திறங்கிய மற்றொரு குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினருடன் வருகை தந்திருந்த சகாக்களை தாக்கியுள்ளதுடன், அவர்களும் திரும்பி தாக்கியுள்ளனர்.

இதனால் இருதரப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்றதுடன், நாடாளுமன்ற உறுப்பினரையும் தாக்க முற்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்று கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் ஏறி தனது அலுவலகம் நோக்கிச்சென்றுள்ளார்.

எனினும் அவரது சகாக்களை துரத்திச்சென்ற குழுவொன்று மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் அலுவலகத்திற்குள் உட்புகுந்து தாக்க முற்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சிறீலங்கா காவல்த்துறையினரக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மோதலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments