வவுனியாவில் போதைப்பொருள் வியாபாரத்தில் பெண் கைது!

You are currently viewing வவுனியாவில் போதைப்பொருள் வியாபாரத்தில் பெண் கைது!

போதைப்பொருட்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியாவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வவுனியா மடுகந்தை விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய , நேற்றயதினம் இரவு வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் சோதனைகளை மேற்கொண்ட விசேடஅதிரடிபடையினர் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த 25 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து ஒருகிலோ 5 கிராம் கேரளாகஞ்சாவும், 2 கிராம்60 மில்லிகிராம் கெரோயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட பெண் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள