வவுனியா குளத்தில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் !

You are currently viewing வவுனியா குளத்தில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் !

வவுனியாவில் குளத்தில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு சிறீலங்கா காவற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா குளத்தில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் வவுனியா பொலிஸாரால் நேன்று (19.03) காலை மீட்கப்பட்டிருந்தது.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் வவுனியா சிறீலங்கா காவற்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் இளைஞனின் சடலம் அடையாளம் காணப்படவில்லை.

25 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுவதுடன்,  இடது கையில் அம்மா என பச்சை குத்தியுள்ளார்.

கழுத்தில் சிவப்பு நூலும், ஒரு கையில் ஆலய நூலும், மற்ற கையில் நீல பட்டியும் அணிந்துள்ளார்.

எனவே, இவ் இளைஞன் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு அல்லது வவுனியா சிறீலங்கா காவற்துறை நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு சிறீலங்கா காவற்துறையினர் கோரியுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments