வவுனியா பகுதியில் தொடருந்தில் மோதிபெண் ஒருவர் பலி !

You are currently viewing வவுனியா பகுதியில் தொடருந்தில் மோதிபெண் ஒருவர் பலி !

வவுனியாவில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட பெண்ணொருவர் மீது ரயில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் புளியங்குளம், புதூர் பகுதியில் நேற்றைய தினம் (29-02-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயில் புதூர் பகுதியில் உள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, உயிரிழந்த பெண்ணின் சடலம் மாங்குளம் ரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து மாங்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் 45 தொடக்கம் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சடலம் கடுமையாக சேதமடைந்துள்ளதால் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம்  சிறீலங்கா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments