வவுனியா மதுபான நிலையத்தில் இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை!

You are currently viewing வவுனியா மதுபான நிலையத்தில் இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலையில்  இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்த சந்தேகநபர் நேற்று  (20) மாலை அப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் வவுனியா சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

பூந்தோட்டம் சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்று முன்தினம் (18.08)உயிரிழந்த நபர்மீது அங்கிருந்த இரு நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (20.08) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய தங்கராசா பிரதீபன் என்ற நபர் உயிரிழந்துள்ளதுடன் பூந்தோட்டம் பகுதியினை சேர்ந்த 32வயதுடைய சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் சிசிரிவி உதவியுடன் மற்றைய சந்தேகநபரை  தேடி வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments