வீட்டிலிருந்தே பணிகளை கவனிக்க ஊழியர்களுக்கு வேண்டுகோள் : டுவிட்டர்

  • Post author:
You are currently viewing வீட்டிலிருந்தே பணிகளை கவனிக்க ஊழியர்களுக்கு வேண்டுகோள் : டுவிட்டர்

பிரபல சமூகவலைத்தளமான டுவிட்டர், தனது பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பை அடுத்து டுவிட்டர் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள், அலுவலகங்களுக்கு வராமல் வீடுகளில் இருந்தே பணியாற்றுவதை ஊக்குவித்து வருகிறது.

எனினும் இந்த வழிகாட்டுதல் கட்டாய உத்தரவாக இன்றி ஊழியர்களின் விருப்பத்துக்கு தகுந்தபடி செயல்படுத்தப்படுகிறது. அலுவலகத்தில் வந்து பணியாற்ற விரும்பும் ஊழியர்களுக்காக அலுவலகங்களில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பகிர்ந்துகொள்ள