வீரம் விளைஞ்ச பூமி…

You are currently viewing வீரம் விளைஞ்ச பூமி…

வீரம் விளைஞ்ச பூமி…

அப்பா
உங்கள் பெயரை படிக்க
நெஞ்சில் விடுதலைத்தீ
வெடிக்கிறது!
என்னருகில்
நீங்கள் இல்லை என்றதும்
இதயம் சுக்குநூறாய்
உடைகிறது!

நீங்கள் மறைந்தாலும்
உங்கள் கனவுகள்
தூங்காது!
எங்கள் நாடி நாளங்கள்
சுருங்காது!
எத்தனை யுகங்கள் கடந்தாலும்
தணியாததாகம்
தீராது!
தன்மானத் தமிழனின்
உணர்வுகள் சாகாது!

நீங்கள் புதைக்ப்படவில்லை
விதைகளாய் விதைக்பட்டுள்ளீர்கள்!
உங்கள் வயல்வெளிகளில்
கூடிநின்று நீரிறைக்க
நீர்விழிகள்
கார்முகிலாய்
கருக்கட்டுகிறது!

உங்கள் வேரோடிய நிலங்களில்
விடுதலைக்காற்று
வீசவேண்டும்!
மக்கள் செந்நீரோடிய மண்ணில்
மகிழ்வொலிகள் தழுவவேண்டும்!

சிந்திய குருதியில்
அடுத்த சந்ததி சிரித்திடவேண்டும்!
சீரிய சிந்தனையில் தீராத பிணி
ஒழிந்திடவேண்டும்!

வானம் வசப்படும் வரை
இறக்கைகளை விரிப்போம்!
உங்கள் ஈகம் இயக்கும் வரை
எங்கள் ஈழம் சிலிர்த்து நிற்கும்!
தணியாத தாகம் இருக்கும் வரை
தரணியில் தமிழ் தளைத்து எம்பும்!

✍️தூயவன்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments