வெடிபொருட்களை தேடி இரண்டு இடங்களில்தோண்டல் எதுவும் கிடைக்காத நிலை!

You are currently viewing வெடிபொருட்களை தேடி இரண்டு இடங்களில்தோண்டல் எதுவும் கிடைக்காத நிலை!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் தனியார் காணி ஒன்றில் 07.10.2020 அன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டப்பட்ட போதும் எதுவித பொருட்களும் கிடைக்கவில்லை
08.10.2020 அன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தனியார் ஒருவரின் காணி ஒன்றில் விடுதலைப்புலிகளால் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டப்பட்ட போதும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் தோண்டிய பகுதியினை மூடிவிட்டு சென்றுள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள