வெளிநாடொன்றில் ஒரே இரவில் சுடுகாடான கிராமம்!

You are currently viewing வெளிநாடொன்றில் ஒரே இரவில் சுடுகாடான கிராமம்!

மேற்கு ஆப்பிரிக்காவின் சிறிய கிராமம் ஒன்றில் சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே இரவில், அங்குள்ள மனிதர்கள், விலங்குகள் பறவைகள் பூச்சிகள் என மொத்தமும் மரணமடைந்த சம்பவம் தற்போதும் அங்கு திகிலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 1986 ஆகஸ்டு 21ம் திகதி மேற்கு ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டில் சிறிய கிராமமான நியோஸ் பகுதியில் இரவு சுமார் 9 மணிக்கு தொலைவில் எங்கோ இடி விழுந்தது போன்ற ஒரு சத்தம் கேட்டுள்ளது.

அடுத்த நாள் பகல் கண் விழித்த அந்த கிராமவாசிகளில் ஒருவர், தமக்கு அறிமுகமான அனைவரும் இறந்து போன தகவல் கேட்டு ஸ்தம்பித்து போயுள்ளார். வெறிச்சோடிய மற்றும் அமைதியான கிராமத்தின் வழியாக மயக்கமான நிலையில் நடந்தார்.

அப்போது பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டு, அவரை நெருங்கியுள்ளார். குறித்த பெண்ணும் இவருக்கு அறிமுகமானவர் தான், அவரது கால் அருகே அந்த பெண்ணின் பிள்ளைகள் சடலமாக காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், அந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் 30 பேர்களின் சடலம் அப்பகுதியில் காணப்பட்டுள்ளது. மட்டுமின்றி, அவர்களின் 400 கால்நடைகளும் சடலமாக மீட்டுள்ளனர்.

அந்த நாள், சடலங்களின் மீது ஈக்கள் ஏதும் மொய்க்கவில்லை என்பதையும் அந்த கிராமவாசி புரிந்துகொண்டுள்ளார். முந்தைய நால் இரவு 9 மணிக்கு யார் யார் எங்கே இருந்தார்களோ, அங்கேயே சடலாமாக கிடந்துள்ளனர்,

மொத்தம் 1,746 கிராம மக்களும் 3,500 பண்ணை விலங்குகளும் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் அந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

அதாவது அருகில் உள்ள நியோஸ் ஏரியில் இருந்து கார்பன் டை ஆக்சைட் வாயு ஒரு வினோதமான சத்தத்துடன் வெளியேறியுள்ளது. மொத்தமாக 1.6 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் டை ஆக்சைட் வாயு அந்த இரவில் வெளியேறியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே அந்த ஏரி அருகாமையில் குடியிருக்கும் மக்கள் மொத்தமாக மூச்சுத்திணறி மரணமடைந்துள்ளனர். பொதுவாக நீல வண்ணத்தில் காணப்படும் அந்த ஏரி நீர், அதன் பின்னர் ரத்த சிவப்பாக மாறியது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments