ஸ்பெயினில் ஒரே நாளில் 285 பேர் பலி : கொரோனா கொடூரம்!

  • Post author:
You are currently viewing ஸ்பெயினில் ஒரே நாளில் 285 பேர் பலி : கொரோனா கொடூரம்!

ஒரே நாளில் 285 பேர் பலியானதைத் தொடர்ந்து, ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1378 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியை தொடர்ந்து கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் உருவெடுத்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,378 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,374 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள