ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தம்! – ஐசிசி முடிவு.

You are currently viewing ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தம்! – ஐசிசி முடிவு.

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை செய்துள்ளது.

ICCயின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கை கிரிக்கெட் தனது கடமைகளை கடுமையாக மீறுவதாக நேற்று சபை கூடி தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் செயல்பாடு, சுதந்திரம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அரசின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் மேலும் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் பணிப்பாளர் சபை இலங்கையில் கிரிக்கெட் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை இணையத்தளத்தின் ஊடாக நடத்தியதன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேரவையின் சிறப்புக் கூட்டம் நவம்பர் 18-21 திகதிகளில் இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments