“குழந்தைகள் மீது குண்டு வீசுவதை நிறுத்துங்கள்” – ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வலியுறுத்தல்!

You are currently viewing “குழந்தைகள் மீது குண்டு வீசுவதை நிறுத்துங்கள்” – ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வலியுறுத்தல்!

காசா மீது குண்டுவீசி பொதுமக்கள், குழந்தைகளை இஸ்ரேல் கொல்வதை நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என கூறியுள்ள ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், குழந்தைகள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பான நேர்காணல் அளித்துள்ள மேக்ரான், ‘குழந்தைகள் மீது குண்டு வீசப்படுவதற்கு நியப்படுத்துதல் என்பது இல்லை. போர் நிறுத்தம் இஸ்ரேலுக்கு நன்மை பயக்கும் என்றும் மேக்ரான் கூறியுள்ளார்.

அத்துடன் அவர், ‘ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகளை பிரான்ஸ் தெளிவாக கண்டிக்கிறது. காஸாவில் இந்த குண்டுத் தாக்குதலை நிறுத்துமாறு நாங்கள் அவர்களை வலியுறுத்துகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் போர்நிறுத்தத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மற்றும் பிரித்தானிய ஜனாதிபதி ரிஷி சுனக் ஆகியோரையும் மேக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments