ஹெரோயின் , கஞ்சாவுடன் 4 பேர் கைது!

You are currently viewing ஹெரோயின் , கஞ்சாவுடன் 4 பேர் கைது!

மட்டக்களப்பு- ஏறாவூரில் ஹரோயின் மற்றும் கஞ்சாவுடன் 4 பேரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.சிறீலங்கா மட்டக்களப்பு- ஏறாவூரில் ஹரோயின் மற்றும் கஞ்சாவுடன் 4 பேரை கைது செய்துள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஏறாவூர் சிறீலங்கா காவல் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஏறாவூர் பகுதியிலுள்ள குறித்த பகுதியில் வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஹெரோயினை எடுத்து கொண்டு சென்ற ஒருவரை மடக்கி பிடித்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 130 மில்லிக்கிராம் ஹெரோயின் மீட்டனர்.

இதனை தொடர்ந்து மைலம்பாவெளி பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து ஆயிரம் மில்லிக்கிராம், கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளில் பயணித்த மட்டக்களப்பு நாவற்கேணி மற்றும் மைலம்பாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 50 மில்லிக்கிராம் கஞ்சாவையும் ஒரு மோட்டர்சைக்கிள் ஒரு துவிச்சக்கரவண்டி மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments