தேவாலயத்திற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல்!

You are currently viewing தேவாலயத்திற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல்!

யாழ்.சுழிபுரம் – பாண்டவெட்டை பகுதியிருந்து தேவாலயத்திற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது.

இதன்போது பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் பேருந்தின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

அதனையடுத்து  சிறீலங்கா காவற்துறையினர், இராணுவத்தினர் மற்றும் சிறீலங்கா காவற்துறை விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்துக்கு வந்ததால், அப்பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவியது.

இச்சம்பவம் குறித்து  சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை (ஜன 01) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்லுண்டாய் பகுதியில் உள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குறித்த நபரை , நேற்றைய தினம் இரவு முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளடங்கிய வன்முறை கும்பல் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments