மக்களின் எதிர்ப்பை மீறியும் சிங்கள படைகளின் அத்துமீறல் தொடர்கிறது!

You are currently viewing மக்களின் எதிர்ப்பை மீறியும் சிங்கள படைகளின் அத்துமீறல் தொடர்கிறது!

யாழ்ப்பாணம்-தையிட்டியில் தனியார் காணியொன்றில் அத்துமீறி அமைக்கப்பட்டுவரும் பெளத்தவிகாரைக் அமைத்தலுக்கெதிராக போராட்டத்தினை நடத்திய ,நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ. கஜேந்திரன் அராஜகமான முறையில் கைது செய்து சிறிலங்கா காவல்துறையால் தூக்கிச்செல்லப்பட்டார்.அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உணர்வாளர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி விரட்டியதோடு, அவர்களில்  9 பேரைக்  23.05.2023 அன்று   கைது செய்தமைக்கு எதிராக சிங்கள  பொலிஸாரின் சூழ்ச்சிகளை முறியடித்து   தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தையிட்டி விகாரை முன்  மக்கள் பலத்துடன்    நேற்று போராட்டத்தை  தொடங்கியது .

இந்நிலையில்   தமிழர்களின் கனிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் திறப்பு விழாவிற்கு எதிராக  இன்று  மாபெரும்   கண்டப்போரட்டத்தை  தமிழ்த் தேசிய  மக்கள்  முன்னணி  ஒழுங்குப்படுத்தியுள்ளது

இதன் ஒரு  அங்கமாக தொடர்ச்சியாக  தையிட்டியில்  தொடர்ந்து  போராட்டத்தினை நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ. கஜேந்திரன்  இன்று அதிகாலையிலும்  பேரினவாத  இராணுவத்தினரின் சட்டவிரோத திஸ்ஸவிகாரை திறப்பு விழாவுக்கு எதிராக  போராட்டத்தை   தொடர்ந்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments