ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள்!

You are currently viewing ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள்!

சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின் 2002.04.08 அன்று திறக்கப்பட்ட ஏ 9 வீதி மீண்டும் மூடப்பட்டு இன்றுடன் 14 வருடங்கள். 2006.08.11 யாழ் கண்டி நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தது.

யுத்த மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்த காலம். விடுதலைப்புலிகளால் 2006.07.21 மாவிலாறு பூட்டப்பட்டு 2006.07.24 இல் மீண்டும் நல்லெண்ண அடிப்படையில் மாவிலாற்றை புலிகள் திறந்து விடுகின்றனர்.

ஆனால் அதனை விரும்பாத சிங்கள அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மாவிலாற்றை கைப்பற்றுவதற்காக படை நடவடிக்கையினை 2006.07.26 ஆம் திகதி ஆரம்பிக்கிறது. 2006.08.02 ஆம் திகதி மாவிலாறு அணைக்கட்டை இராணுவம் கைப்பற்றுகின்றது.

இந்த நிலையில் மாவிலாற்றில் சண்டை நடக்கும் வேளையில் தான் யாழ்ப்பாணத்தினுள் விடுதலைப்புலிகளின் ஊடுருவல்களை தடுப்பதற்காக என்று கூறி 2006.08.11 ஏ-9 வீதி மூடப்படுகிறது. மூடப்பட்ட அன்றைய தினமே முகமாலை முன்னரங்க பகுதியில் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது இராணுவம் விமான தாக்குதலை மேற்கொள்கிறது..

ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள்! 1

2006.08.28 நடைபெற்ற இறுதி பேச்சுவார்த்தைக்கு விடுதலைப்புலிகளுக்கு போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ள சிறிலாங்கா அரசு மறுத்த நிலையில் நோர்வேயின் விசேட விமானம் மூலம் நோர்வே சென்றது அரசியல் துறைப்பொறுப்பாளர் திரு சுப தமிழ்ச்செல்வன் உட்பட்ட புலிகளின் பேச்சுவார்த்தை அணி

பிரதான விடயமாக பேச்சுவார்த்தை மேசையில் ஏ 9 வீதியை திறவுங்கள் யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு உணவில்லாமல் பட்டினிச்சாவு ஏற்படப்போகிறது என்றும் திருகோணமலையில் இராணுவம் கைப்பற்றிய இடங்களை கைவிட்டு மீண்டும் பழைய நிலைகளுக்கு செல்ல வேண்டும் எனவும் இதன்பிறகே மற்ற விடயங்கள் பேசலாம் எனவும் தமிழ்ச்செல்வன் அவர்கள் பலதடவை கோரினார்.

ஆனால் பாதையை திறக்கவும் சண்டையை நிறுத்தி பழைய நிலைக்கு இராணுவம் திரும்பி செல்லவும் அரசு சம்மதிக்காத நிலையில் பேச்சுவார்த்தையை இடையில் முறித்துக்கொண்டு அரச தரப்பு பேச்சுவார்த்தை மேசையிலிருந்து வெளியேறுகிறது. அத்துடன் இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிகிறது. இதன் பின்னர் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்தும் விலகுவதாக ஒருதலைப்பட்சமாக அரசு அறிவித்தது.

பகிர்ந்துகொள்ள