அத்துமீறி பணியாற்றும இனவழிப்பு படைகள்!

You are currently viewing அத்துமீறி பணியாற்றும இனவழிப்பு படைகள்!

​ ஊழியர்களுக்குரிய பதவி உயர்வு வழங்குதல், பயிற்சிகளின் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலை சுகாதார சிற்றுாழியர்கள் பல்வேறு கோரி பணிப்புறக்கணப்பு போராட்டம் நடத்திவரும் நிலையில், முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில்  சிங்களே பேரினவாத  இராணுவத்தினர்  நுழைந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர். 

படையினரை கொண்டு மக்கள் சேவையினை அரசு மேற்கொள்ளுமாக இருந்தால் அரச உத்தியோகத்தர்கள் எதற்கு என்ற கேள்வி முல்லைத்தீவு மாவட்டத்தில் எழுந்துள்ளது.இது படையிரின் ஆட்சியினை எடுத்துக்காட்டு செயற்பாடக அமைந்துள்ளது.

25.02.21 இன்று மாஞ்சோலையில் அமைந்துள்ள மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் நோயாளர்களை வரவேற்பதில் இருந்து மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு செல்வது வரை படையினரே செய்துவருகின்றார்கள்.

முக்கிய குறிப்பு :-

சிங்கள பேரினவாத அரசு கடந்த காலங்களில்  வைத்தியசாலை என்று  கூட கருதாமல்  தனது பேரினவாத படையை  வைத்து  குண்டு போட்டு  தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ள நிலையில் அதை  சர்வேதேசத்திடம் மறைக்க  இன்று   இந்த நாடகம் நடத்துகிறது .
சிங்கள அரசும் அதன் படைகளும் இரத்த கரை படிந்த கைகள் 

பகிர்ந்துகொள்ள