அம்பாறையில் கணவன் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!

You are currently viewing அம்பாறையில் கணவன் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!

அம்பாறை, திருக்கோவில் சாகாமம் பகுதியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது இடி மின்னல் தாக்கியதில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (30) மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

இவர்கள் இன்று மாலை சாகாமம் தேசிய நீர் வடிகால் சபை தண்ணீர் தாங்கிக்கு அருகாமையில் உள்ள தமது காணியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மாலை 6 மணியளவில் கனத்த மழையுடன் ஏற்பட்ட இடடிமின்னல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள