ஆக்கபூர்வமாக நடைபெற்ற அன்னை தலைமை மாற்றம் தொடர்பான மக்கள் சந்திப்பு!

You are currently viewing ஆக்கபூர்வமாக நடைபெற்ற அன்னை தலைமை மாற்றம் தொடர்பான மக்கள் சந்திப்பு!

இன்று அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட றொம்மன் வளாக பெற்றோர் குழுவாலும் பெற்றோராலும்  14 ஆண்டுகளாக பதவியை விட்டு விலகாது ஒட்டிக்கொண்டிருக்கும் அன்னை தலைமை நிர்வாகியின் மாற்றம் மற்றும் றொம்மன் அன்னை  பூபதி தமிழ்க்கலைக்கூட வளாகத்தின் நிர்வாக மாற்றம் தொடர்பான மக்கள் சந்திப்பு நடாத்தப்பட்டிருந்தது.

இச்சந்திப்பில் கணிசமான மக்கள் கலந்து கொண்டு தனிமனித அதிகார ஆசையால் சமூகப்பிரச்சனையாக மாற்றி மக்கள் மனங்களில் பிரிவுகளை உண்டுபண்ணும் அன்னைத்தலைமை நிர்வாகியையும் தனிமனிதனின் தவறுகளுக்கு துணையாக நிற்கும் றொம்மன் நிர்வாகத்தையும் மாற்றவேண்டும் என்று ஏகமனதாக மக்களால் மூன்றாவது தடவையாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளதோடு மாற்றத்திற்கான அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

தொடர்ந்தும் பெற்றோர்களை மதிக்காது பொய்களை விதைத்தவாறு தங்கள் அதிகாரங்களை நிலைப்படுத்தலாம் என்ற எண்ணத்தோடு கனவுகாணும் அவர்களுக்கு இம்மாதம் 5ம் திகதி நடைபெறும் பிரத்தியேக ஆண்டுக்கூட்டம் சட்டரீதியாக தக்க பதிலை வழங்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

கடும் குளிர் கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும் கணிசமான மக்கள் சமூக அக்கறையுடன் கலந்து கொண்டு பாடசாலையின் எதிர்கால வளர்ச்சிக்கான பாதைக்கு பக்கபலமாக பங்கெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4.8 4 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments