ஆசிய தடகள போட்டியில்: தமிழக வீரர் பதக்கம் வென்று புதிய சாதனை!

You are currently viewing ஆசிய தடகள போட்டியில்: தமிழக வீரர் பதக்கம் வென்று புதிய சாதனை!

கஜகஸ்தானில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தமிழகத்திலிருந்து 7 பேர் உள்பட நாடு முழுவதும் இருந்து 26 வீரர்கள் இந்தியா சார்பில் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மும்முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்ப்) போட்டியில் தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் கலந்து கொண்டார். இவர் இந்திய அணிக்கு தேர்வான போதே பிரவீன் சித்ரவேல் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனை நிறைவேற்றும் வகையில் மும்முறை தாண்டுதல் போட்டியில் பிரவீன் சித்ரவேல் 16.98 மீட்டர் தொலைவுக்குத் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்திய வீரர் அமர்ஜீத் சிங் 16.26 மீட்டர் தூரம் தாண்டியதே தேசிய அளவிலான சாதனையாக இருந்த நிலையில், தற்போது பிரவீன் சித்ரவேல் அதனை முறியடித்துள்ளார். இதனையடுத்து பிரவீன் சித்ரவேலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 21 வயதான பிரவீன் சித்ரவேல் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments