ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்!

You are currently viewing ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்!

சாவல்கட்டு கடற்கரையில் இறங்குதுறையில் அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையினை மானிப்பாய் பிரதேச சபையினர்சிறீலங்கா பொலிஸாருடன் இணைந்து, உடைத்து எறிந்து விட்டதாகவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதாகவும் குற்றஞ்சாட்டி, அப்பகுதி மீனவர்கள் வட மாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வட மாகாண ஆளுநரைச் சந்தித்த மீனவர்கள், கடற்றொழிலாளர்களின் அபிவிருத்தி செயற்திட்டங்களைத் தடுக்க வேண்டாம் என்று கோரிக்கை முன்வைத்ததுடன், அரச நிதியில் இறங்குதுறைமுகம் புனரமைப்பு செய்யவில்லை என்றும் மீனவர்களின் சிறு நிதியில் இறங்குதுறைமுகம் புனரமைப்பு செய்ததாகவும், பிடுங்கி எறிந்த பெயர்ப்பலகையை அதே இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments