இந்தியாவில் கொரோனா : பலி எண்ணிக்கை 1,154 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing இந்தியாவில் கொரோனா : பலி எண்ணிக்கை 1,154 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,074 ஆக நேற்று உயர்வடைந்து இருந்தது. 8,325 பேர் குணமடைந்தும், 23,651 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 50 ஆக உயர்வடைந்தது.

இந்த நிலையில், இந்திய மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,147 ஆக உயர்வடைந்துள்ளது. 8,889 பேர் குணமடைந்தும், 25,007 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 50ல் இருந்து 35 ஆயிரத்து 43 ஆக உயர்வடைந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள