இனப்படுகொலையை நினைவுகூர்ந்து கனடா நாடாளுமன்றில் ஹரி ஆனந்தசங்கரி உரை!

You are currently viewing இனப்படுகொலையை நினைவுகூர்ந்து கனடா நாடாளுமன்றில் ஹரி ஆனந்தசங்கரி உரை!

கனடா – ஸ்காபறோ ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவுநாளை நினைவுகூர்ந்து கனேடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அவரது உரை விபரம் வருமாறு,

சபாநாயகர் அவர்களே, கனடாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள், மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவு நாளைக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் துக்கம் கடைப்பிடித்து, துயருருவதுடன், இத்தகைய இனப்படுகொலையையும், அட்டூழியத்தையும் இந்த உலகில் மீண்டும் அனுமதிக்கப்போதிவல்லையென உறுதிபூணுவார்கள். ஆனால், நினைவுகூர்வதற்கான உரிமைகூடக் கவலைக்குரிய வகையில் தற்போது தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இலங்கை அரசு நினைவுச் சின்னங்களைத் அவமதிப்பதும், நினைவேந்தல் புரிவோரை அச்சுறுவதும் தொடர்ந்துவருகிறது.

இலங்கைத் தீவிலும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள், இந்தக் கட்டுப்பாடுகளின் மத்தியிலும், மே 18 ஆந் திகதி நேரடியாகவோ, மெய்நிகர் முறையிலோ கரங்கோர்த்து மரணமான எமது சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், தமிழர்கள் சுதந்திரம், சமத்துவம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுடன் இலங்கைத் தீவில் வாழ்வதை உறுதி செய்வதற்கு மீள உறுதிபூணுவார்கள். நாம் எதையும் தாங்கிக்கொள்வோம். எம்மை ஒருபோதும் மௌனமாக்க முடியாது.

மறைந்தோருக்கான நினைவுச் சின்னங்கள் எமது கூட்டு நினைவிலும், எமது இதயங்களிலும் அமைந்துள்ளன. நீதியை நோக்கிய பயணம் நீண்டதாகவும், வேதனையானதாகவும் இருந்தாலும், நீதி கிடைக்கும் வரை நாம் அதைத் தொடர்வோம் என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments