ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி!

You are currently viewing ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி!

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் முன்னெடுப்பது உறுதி என்று தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அந்த முடிவை கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ளார். நெருக்கடியான சூழலில் ஈரானுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ஜோ பைடன், முடிவை கைவிடுங்கள் என்பதே தமது செய்தி என குறிப்பிட்டுள்ள அவர், இஸ்ரேலைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இஸ்ரேலை பாதுகாப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ள ஜோ பைடன், நாங்கள் இஸ்ரேலை ஆதரிப்போம். இஸ்ரேலைப் பாதுகாக்க நாங்கள் உதவுவோம், ஈரான் ஒருபோதும் இஸ்ரேல் மீது வெற்றிபெறாது என்றார்.

உளவுத்துறை தரவுகளை பொதுவெளியில் பகிர முடியாது என குறிப்பிட்டுள்ள ஜோ பைடன், மிக விரைவில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடுக்கும் என்பது உறுதி என்றார்.

இதனிடையே, இஸ்ரேல் மீதான ஈரானின் உடனடி தாக்குதல் என்பது நிஜம் மட்டுமின்றி சாத்தியமான அச்சுறுத்தல் என்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.

ஆனால் ஈரான் எப்போது முடிவெடுக்கும் என்பதை அறுதியிட்டு கூற முடியாது என்றார். இருப்பினும் அமெரிக்காவும் தயார் நிலையில் இருப்பதாகவே ஜான் கிர்பி குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments