ஈழத் தமிழ்ப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன!

You are currently viewing ஈழத் தமிழ்ப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன!

முதல் பெண் மாவீரர் 2-ம் லெப்.மாலதியின் 36-ஆண்டு நினைவு நாளும் ஈழத் தமிழ்ப் பெண்கள்
எழுச்சி நாளுமான இன்று – (10.10.2023) செவ்வாய்க்கிழமை இந் நிகழ்வுகள் முல்லைத்தீவில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு சமூக செயற்பாட்டாளர் சகிலா தலைமையில் காலை-08.30, மணியளவில் முல்லைத்தீவு செல்வபுரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட  இடத்தில் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளன.

நிகழ்வில் -02,ம் லெப்.மாலதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான துரைராஜா-ரவிகரன் மற்றும், பீற்றர்-இளஞ்செழியன்,கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் க.தவராசா, பிரதேச சபை உறுப்பினர் கெங்காதரன், சமூக செயற்பாட்டாளர் ஜீட்சன், ஆகியோருடன் மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஈழத் தமிழ்ப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன! 1

ஈழத் தமிழ்ப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன! 2

ஈழத் தமிழ்ப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன! 3

ஈழத் தமிழ்ப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வுகள் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன! 4

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments