உடுத்துறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருளினால் பரபரப்பு !

You are currently viewing உடுத்துறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருளினால் பரபரப்பு !

உடுத்துறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருளினால் பரபரப்பு ! 1

வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஒன்பதாம் வட்டாரம் அரசடி முருகன் கோவிலடியிலையே இந்த மர்ம பொருள் கரையொதுங்கியுள்ளது

கரையொதுங்கிய குறித்த பொருளை பொதுமக்கள் அதிகளவானோர் பார்வையிட்டு வருவதுடன் பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருளில் Asia 2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கப்பலில் இருந்து தவறி விழுந்து கரையொதுங்கியிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

உடுத்துறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருளினால் பரபரப்பு ! 2

அண்மைய நாட்களாக உடுத்துறை வேம்படி,நாகர்கோவில்,உடுத்துறை என பல்வேறு விதமான மர்ம பொருட்கள் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சி கிழக்கு,  நாகர்கோவில் கிழக்கு கடற்றொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வத்தை வடிவான 18 அடி நீளம் கொண்டதும் 10 அடி அகலம் கொண்ட இனம்தெரியாத மிதவை கலம் ஒன்று கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளது.
கடந்த 01.01.24 அன்று காலை கரையொதுங்கிய குறித்த கலத்தை  மீனவர்கள் கடும் முயற்சி எடுத்து  கரையில் இழுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கரையொதுங்கிய குறித்த கலம் தொடர்பில் பொலிசார் மற்றும் கிராம அலுவலருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சில நாட்களுக்கு முன்பு வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி கடற்கரையிலும் மிதவை ஒன்று கரையொதுங்கி பரபரப்பை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments