காதலியையும் தாயையும் வெட்டி விட்டு இளைஞன் உயிரை மாய்ப்பு!

You are currently viewing காதலியையும் தாயையும் வெட்டி விட்டு இளைஞன் உயிரை மாய்ப்பு!

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு , பனிப்புலம் பகுதியில்  நேற்று அதிகாலை தனது காதலியையும், காதலியின் தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டிய இளைஞன் ஒருவர், தனது உயிரை மாய்த்துள்ளார் .

இளைஞனும் அப்பகுதியை சேர்ந்த யுவதியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக காதலர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காதலியின் வீட்டுக்கு சென்று மறைந்திருந்த இளைஞன் , வீட்டார் காலை கதவை திறந்த வேளை , வீட்டினுள் நுழைந்து , காதலியையும் , அவரது தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

சத்தம் கேட்டு கூடிய அயலவர்கள் வெட்டு காயங்களுடன் காணப்பட்ட தாயையும் மகளையும் மீட்டு , வைத்தியசாலைக்கு அனுமதி வைத்துள்ளனர்.

அந்நிலையில் வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருந்த காணி ஒன்றில் காதலியை வெட்டியதாக சந்தேகிக்கப்படும் இளைஞன் தனது உயிரை மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments