கிளாலியில் மர்மப் பொருள் வெடித்து சிறுமி படுகாயம்!

You are currently viewing கிளாலியில் மர்மப் பொருள் வெடித்து சிறுமி படுகாயம்!

கிளிநொச்சி – கிளாலிப் பகுதியில் நேற்று மாலை மர்மப் பொருள் வெடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றினை தாயாருடன் இணைந்து துப்புரவு செய்தபோதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சிறுமிக்கு 16 வயது எனவும், நாளை சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவி எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. காயமடைந்த சிறுமி யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பளைப் சிறீலங்கா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments