கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பம் ! பெருமளவில் சிறீலங்கா காவற்துறை குவிப்பு!

You are currently viewing கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பம் ! பெருமளவில் சிறீலங்கா காவற்துறை குவிப்பு!

கிளிநொச்சி – இரணைமடு சந்தியிலிருந்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகி உள்ளது.

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு கலந்து கொள்ள என 5 பேருக்கு சிறீலங்கா காவற்துறையினரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ள நிலையில் இப்போராட்டம் ஆரம்பமாகி உள்ளது.

கிளிநொச்சியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதனை கட்டுப்படுத்த குறித்த பகுதியில் பெருமளவான சிறீலங்கா காவற்துறையினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டத்தை அடக்க  சிறீலங்கா காவற்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதுடன், நீர்த்தாரை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

இதேவேளை

சிங்கள பேரினவாத  அரசின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி வட தமிழீழம்  கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் நான்குபேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறீலங்கா காவற்துறையினரின் எதிர்ப்புக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் கலந்துகொள்ளப்பட்ட 4 பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments