கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி பலி!

You are currently viewing கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி பலி!

கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரில் ஒருவரே உயிரிழந்துள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏ-9 வீதி வழியாக பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியால் நடந்து சென்றவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் உயிரிழந்தவர் கிளிநொச்சி விவேகாநந்தாநகர் பகுதியை சேர்ந்த செல்லப்பா சந்திரகுமார் என சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த சிறீலங்கா காவல்த்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள