கைதடியில் கோர விபத்து – சிறீலங்கா ஏஎஸ்பி பலி!

You are currently viewing கைதடியில் கோர விபத்து – சிறீலங்கா ஏஎஸ்பி பலி!

யாழ்ப்பாணம் – கைதடிப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் உதவிப் சிறீலங்கா காவற்துறை அத்தியட்சகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் சிறீலங்கா காவற்துறை நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் சிறீலங்கா காவற்துறை அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த உதவிப் சிறீலங்கா காவற்துறை அத்தியட்சகர் மோதுண்டு வீதியில் வீழ்ந்துள்ளார்.இதன்போது முன்னால் வந்த பாரவூர்தி அவரை மோதித்தள்ளியுள்ளது.

உயிரிழந்தவர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments