கொக்குத்தொடுவாய்மனிதப் புதைகுழியில் கள ஆய்வு.

You are currently viewing கொக்குத்தொடுவாய்மனிதப் புதைகுழியில் கள ஆய்வு.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்மனிதப்புதைகுழி தொடர்பில் (10.08.2023) இன்று வியாழக்கிழமை கள ஆய்வு இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பிற் அமைய நிபுணர் குழு ஒன்று வருகை தந்து பார்வையிட்டு கள ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த நிபுணர் குழுவினரால்
தொல்லியல் திணைக்களத்தின் பாதீட்டு அறிக்கை எதிர்வரும் (17.08.2023)ம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளதெனவும் எதிர்வரும் (21.08.2023) அன்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இறுதிப்போரின் போது முல்லைத்தீவில் சிறீலங்கா படைகளிடம் பலர் கையளிக்கப்பட்டு காணாமல்ப் போகச்செய்யப்பட்டுள்ள நிலையில் அதே மாவட்டத்தின் கொக்குத் தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய மனிதப் புதைகுழி தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments