கொரோனா எதிரொலி திருகோணமலைக்கு செல்வதை தவிர்குமாறு அறிவிப்பு!

You are currently viewing கொரோனா எதிரொலி திருகோணமலைக்கு செல்வதை தவிர்குமாறு அறிவிப்பு!

கொவிட்-19 வைரஸ் பரவும் அபாயம் அதிகரிக்கலாம் என, சுகாதாரப் பிரிவு அடையாளம் கண்டுள்ளதால், அத்தியவசிய காரணங்களை விடுத்து, திருகோணமலை மாவட்டத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் விடுமுறை நாட்களில், பயண நடவடிக்கைகளை அதிகளவில் கட்டுப்படுத்துமாறு, ஆளுநர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அவசியமான முடிவுகளை எடுக்கும் மாகாண குழுக் கூட்டம் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற வேளையில், ஆளுநர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள