கொரோனா நெருக்கடியிலும் 112 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!

You are currently viewing கொரோனா நெருக்கடியிலும் 112 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!

மன்னார் – குதிரை மலை கடற்பகுதியில் 122 கிலோ கேரளா கஞ்சா பொதிகளுடன் கைது செய்யப்பட்ட மூவரையும், விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் எம். கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்

மன்னார் குதிரை மலை கடற்பகுதியூடாக கேரளா கஞ்சா பொதிகளை கடத்தி வந்த சந்தே நபர்கள் மூன்று பேரை சிலாவத்துறை பொலிஸார் நேற்று மாலை மன்னார் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் எம். கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

சிலாவத்துறை கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படையினரால், அவர்கள் மூவரும், 122 கிலோ 460 கிராம் கேரளா கஞ்சா மற்றும் படகுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பகிர்ந்துகொள்ள