கொழும்பில் இருந்து மட்டு.நகர் சென்ற சொகுசு பேருந்து அதிகாலையில் விபத்து!- பலர் காயம்.

You are currently viewing கொழும்பில் இருந்து மட்டு.நகர் சென்ற சொகுசு பேருந்து அதிகாலையில் விபத்து!- பலர் காயம்.

மட்டக்களப்பு – ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் சபலர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த பேருந்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் 4ம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது.

விபத்தில் சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments