சண்டிலிப்பாயில் 21 வயது யுவதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

You are currently viewing சண்டிலிப்பாயில் 21 வயது யுவதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

நேற்றைய தினம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர்  உயிர்மாய்த்துள்ளளார்.

இந்நிலையில் தேவதாஸ் கிருபாஜினி (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த யுவதி  நேற்றைய தினம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் அவர் மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments