திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற வேன் விபத்து : 8 பேர் படுகாயம்!

You are currently viewing திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற வேன் விபத்து : 8 பேர் படுகாயம்!

அவிசாவளையிலிருந்து திருகோணமலைக்கு சிற்றூர்தியில் சுற்றுலா சென்றவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சுற்றுலாவை முடித்துக் கொண்டு அதே சிற்றூர்தியில் திரும்பிச் சென்றுக்கொண்டிருந்த போது, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக பாரவூர்தி மீது சிற்றூர்தி மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது சிற்றூர்தியில் பயணித்த அவிசாவளையைச் சேர்ந்த சிற்றூர்தி சாரதி உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக பாரவூர்தி உதவியாளர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments