சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.6 கோடி ஊக்கத் தொகை!

You are currently viewing சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.6 கோடி ஊக்கத் தொகை!

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற செஸ் போட்டியில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற சென்னையை சார்ந்த ரோஹித் கிருஷ்ணாவுக்கு ரூ. 3 லட்சம், ஸ்பெயினில் நடந்த ஜூனியர் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமிக்கு ரூ.4 லட்சம்,

ஆந்திராவில் நடைபெற்ற 57-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 21 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ. 79 லட்சம், 2021-22-ம் ஆண்டு நடைபெற்ற சப்- ஜூனியர், ஜூனியர், சீனியர் தேசிய அளவிலான சாப்ட்டென்னிஸ் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 56 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 2 கோடியே 5 லட்சத்து 75 ஆயிரம், டோக்கியோவில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 3 வீரர் – வீராங்கனைக்கு ரூ. 2 கோடியே 55 லட்சம், டெல்லியில் நடைபெற்ற கான்டினென்டல் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்பில் பதக்கங்கள் வென்ற 3 வீரர்களுக்கு ரூ.15 லட்சம், கோலாலம்பூரில் நடைபெற்ற 20-வது ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வேலன் செந்தில்குமார், சவுரவ்கோஷல் ஆகிய இருவருக்கும் தலா ரூ.10 லட்சம், பெண்கள் அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற ஜோஸ்னா சின்னப்பா, சுனைனா குருவில்லா மற்றும் அபராஜிதா பாலமுருகன் ஆகிய மூவருக்கும் தலா ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ. 5 கோடியே 96 லட்சத்து 75 ஆயிரத்துக்கான காசோலைகளை 90 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கிடும் அடையாளமாக 9 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments