சிறீலங்காவின் அடிவருடிகள் சமூக ஊடகங்களில்!!

You are currently viewing சிறீலங்காவின் அடிவருடிகள் சமூக ஊடகங்களில்!!

சிறீலங்கா கொடூரமாக கொத்துக்கொத்தாக செய்த கொலைகளை மறைப்பதற்காய் பொய்ப்பிரச்சாரங்களை செய்து விடுதலைப்புலிகள் தங்களை விட மோசமானவர்கள் என்ற விம்பத்தை உருவாக்க தொடங்கியுள்ளார்கள்.
மனிதவுரிமை மீறலுக்கு சிறீலங்கா பொறுப்புக்கூற வேண்டுமென்ற குரல்கள் மேலோங்கி வரும் நிலையில்  இப்போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான காணொளிப்பெட்டகங்கள் திட்டமிட்டு உருவாக்கிய காட்சிகளுடன் உலாவ விடப்பட்டுள்ளது.

இங்கே உருவாக்கப்பட்டுள்ள மிருகவதைக்காட்சிகள் சிறுவர்படைக்காட்சிகள்  அனைத்தும் திட்டமிட்டு இப்போதுள்ள நெருக்கடியை  எதிர்கொள்வதற்காக சிறீலங்காவால் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் உலாவவிடப்படுகின்றது.
இதை சில முதுகெலும்பில்லாத சில தமிழர்களும் தங்கள் முகநூல்களில் பதிவேற்றம் செய்து சிறீலங்காவுக்கு சார்பாக  பிரச்சாரம் செய்யத்தொடங்கியுள்ளார்கள்.
இந்த இழிநிலை தமிழர்களுக்கு மானமுள்ள தமிழர்கள் எதிர்வினையை உருவாக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

பகிர்ந்துகொள்ள