சிறீலங்காவில் சுற்றுலாவியிடம் 1900 ரூபாவுக்கு கொத்து ரொட்டி விற்க முயன்றவர் கைது!

You are currently viewing சிறீலங்காவில் சுற்றுலாவியிடம் 1900 ரூபாவுக்கு கொத்து ரொட்டி விற்க முயன்றவர் கைது!

கொழும்பு – புதுக்கடை பகுதியில் உள்ள வீதியோர உணவகமொன்றில் வெளிநாட்டவரை ஏமாற்றி, கொத்து ரொட்டி பார்சலை 1900 ரூபாவுக்கு விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம், தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்ததுடன், விமர்சனங்களும் முன்வைக்கபட்டன.

அத்துடன், குறித்த உணவக உரிமையாளர் வெளிநாட்டவரிடம் அநாகரிகமான முறையிலும் நடந்து கொண்டதனை அவதானிக்க முடிந்தது.

இந்த நிலையிலே, வெளிநாட்டவருக்கு அதிக விலையில் உணவு விற்பனை செய்ய முயன்ற உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்ட பொலிஸாரினால் குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு 12 ஐச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை வடை ஒன்றை 800 ருபாவுக்கு சுற்றுலா பயணிக்கு விற்று ஏமாற்றிய காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் குறித்த நபரால் வெளியிடப்பட்டு உலாவருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments