சிறீலங்கா பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும்!

You are currently viewing சிறீலங்கா பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும்!

இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு ஏற்ப கொண்டுவர மீளாய்வு செய்ய ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தடுத்து வைத்திருப்பது குறித்தும் விசேட அறிக்கையாளர் மேரி லாலர் உட்பட ஏழு ஐ.நா. அறிக்கையாளர்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சு, வன்முறை மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக மனித உரிமை வழக்குகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக இந்த கைது இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டமையானது விசாரணை இன்றி நீண்ட நாள் தடுத்து வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் விசேட அறிக்கையாளர்கள் மேலும் கவலை தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுதந்திரம் குறித்த விசேட அறிக்கையாளர், கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பது குறித்த விசேட அறிக்கையாளர், சிறுபான்மையினர் பிரச்சினைகள் குறித்த விசேட அறிக்கையாளர் உட்பட ஏழு ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments