சென்னையில் கொரோனா : தொற்றிலிருந்து மீண்ட 84 வயது மூதாட்டி!

  • Post author:
You are currently viewing சென்னையில் கொரோனா : தொற்றிலிருந்து மீண்ட 84 வயது மூதாட்டி!

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 84 வயது மூதாட்டி ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்களான 54 வயது பெண் ஒருவரும் 25 வயது ஆண் ஒருவரும் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று, வெள்ளிக்கிழமை, மேலும் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நோய் பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியிடங்களில் காணப்பட்ட 1,40,176 பேர் மீது வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

1,51,151 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் 1,19,286 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் இதன்மூலம், ரூ.53,72,044 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையின் அறிக்கை தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள