தனக்கிளப்பில் நடந்த மோசமான செயல்!!

You are currently viewing தனக்கிளப்பில் நடந்த மோசமான செயல்!!

சாவகச்சேரி – தனங்கிளப்பு பகுதியில் பாடசாலை மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததுடன், மாணவியின் தாயார் மீதும்,
தாக்குதல் நடத்தியவருக்கு எதிராக சிறீலங்கா காவல்த்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அயலவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தனங்கிளப்பு பகுதியில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் அயல் வீட்டில் வசிக்கும் நபர்,
வெள்ள நீர் தனது வீட்டு வளவுக்குள் வராத வகையில் அயல் வீட்டு வாசலில் இருந்த மண்ணை வெட்டி, தனது வீட்டு வேலிக்கு போட்டுள்ளார்.

அதனை அவதானித்த வீட்டுப்பெண், எதற்காக எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் மண்ணை ஏன் வெட்டுறீங்கள் எமக்கு வெள்ளம் தேங்கும், என தெரிவித்துள்ளார்.
அதற்கு மண்ணை வெட்டிக்கொண்டு இருந்த நபர், கையில் இருந்த மண் வெட்டியால் அப்பெண்ணை தாக்கியுள்ளார்.

அதனால் அவர் மயக்கமுற்று விழுந்துள்ளார்.
அதனை அவதானித்த வீட்டிலிருந்த தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் மகளான பாடசாலையில் கற்கும் மாணவி, ஓடி வந்த போது,
குறித்த நபர் தன்னுடைய சாரத்தை கழட்டி விட்டு மாணவியை நோக்கி “வா” என அழைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


அந்நபரின் குறித்த செயலால் அருவருப்படைந்த மாணவி பயத்தினால் வீட்டினுள் ஓடி சென்று கதவினை பூட்டி விட்டு கூக்குரல் இட்டத்துடன், கிராம சேவையாளர் மற்றும் காவல்த்துறைக்கு அறிவித்துள்ளார்.

அதேவேளை மாணவியின் கூக்குரலை அடுத்து அயலவர்களும் கூடியதை அடுத்து மயக்கமுற்ற பெண்ணை மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
சம்பவ இடத்திற்க்கு வந்த காவல்த்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் தாக்கிய நபரை கைது செய்திருந்தனர்.


இந்நிலையில் தற்போது அந்நபர் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் தான் தாக்கியதற்காக 2 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளதாகவும், அதற்கு அவர்கள் சம்மதிக்க வில்லை எனவும் அயலவர்கள் கூறுகின்றனர்

பகிர்ந்துகொள்ள