தமிழக இளம் பலகை பூப்பந்து வீர‌ர் வாகன விபத்தில் உயிரிழப்பு!

You are currently viewing தமிழக இளம் பலகை பூப்பந்து வீர‌ர் வாகன விபத்தில் உயிரிழப்பு!

83-வது தேசிய பலகைப் வெற்றிக்கிண்ணப் பூப்பந்து போட்டிகள் மேகாலயாவில் இன்று தொடங்குகிறது. இதில், தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் விஷ்வா உள்பட 4 வீரர்கள் நேற்று மகிழுர்ந்து மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு புறப்பட்டு சென்றனர். அசாம் தலைநகர் கவுகாத்தில் இருந்து மேகாலயாவின் ஷிலாங்க் நோக்கி கார் சென்றுகொண்டிருந்தது. மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிரே வந்த கனரக வாகனம் வீரர்கள் பயணித்த மகிழுர்ந்து மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் இளம் வீரர் தீனதயாளன் விஷ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கார் டிரைவர் மற்றும் எஞ்சிய 3 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், விபத்தில் படுகாயமடைந்த மகிழுர்ந்து சாரதியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகிழுர்ந்து விபத்தில் உயிரிழந்த தமிழக பூப்பந்து வீரர் தீனதயாளன் விஷ்வாவின் உடல் இன்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

தேசிய பலகைப் வெற்றிக்கிண்ணப் பூப்பந்து போட்டிகள் தொடரில் பங்கேற்க சென்றபோது மகிழுர்ந்து விபத்தில் தமிழக வீரர் தீனதயாளன் விஷ்வா உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக வீரர் தீனதயாளன் விஷ்வா மகிழுர்ந்து விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments