தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு தொடர்ந்த தமிழர்கள்!

You are currently viewing தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வழக்கு தொடர்ந்த தமிழர்கள்!

மலேசியாவில்   பயங்கரவாதப் பட்டியலில் இருந்து  தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை அகற்றக்கோரும் வழக்கு ஏப்ரல் 14ஆம் தேதி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு பதிவு செய்ததாக மனுதாரர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

 முன்னதாக இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் கடந்த 2020 அக்டோபர் 9ஆம் தேதி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

 கடந்த ஏப்ரல் 14இல் நடந்த விசாரணைக்குப் பிறகு மீண்டும் மேல் முறையீட்டு நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இறுதி முயற்சியாக மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுப் பதிவு செய்யப்பட்டதுடன் மனுதாரர் வீ. பாலமுருகன் சார்பில் வழக்கறிஞர்களான அருள் மேத்யூஸ், ஒமார்குட்டி, முகமது பர்ஹான், திருமதி க. கலைநிலா, லிம் வெய் ஜெய்ட், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டத்தோ அம்பிகா ஆகியோர் இணைந்திருக்கின்றனர்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments