பண்ணையாளர்களுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பு நகர் பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் !

You are currently viewing பண்ணையாளர்களுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பு நகர் பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் !

 

 

மயிலந்தமடு பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு சித்தாண்டி போராட்ட இடத்தில் நீதிமன்றத்தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று மட்டக்களப்பு நகர் பகுதியில் பண்ணையாளர்களுக்கு நீதிவேண்டி இன்று (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மாபெரும் போராட்டம் இடம்பெறவுள்ளது.

நேற்றைய நாள் (07.10.2023) சனிக்கிழமை காலை நேரம் சித்தாண்டி போராட்ட களத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் அவர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

 

நேற்று மதிய நேரம் சித்தாண்டி போராட்ட களத்தில் மட்டக்களப்பு சிறீலங்கா காவல்த்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்களுக்கு இடையூறு விளைவித்த போது அதற்கு எதிராக பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று மதிய நேரம் சித்தாண்டிபோராட்ட களத்தில் போராட்டம் நடாத்துவதற்கான
நீதிமன்றத்தடை உத்தரவு.

பண்ணையாளர்களுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பு நகர் பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ! 1

பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு போராட்ட இடத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பில் இன்று காலை (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை பண்ணையாளர்களுக்கு நீதிவேண்டி இடம்பெறும் போராட்டத்திற்கான அழைப்பை மட்டக்களப்பில் இருந்து விடுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரத்தினம்-சுகாஸ் அவர்கள்.

kv

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments