திடீரென வீட்டுக்குள் புகுந்த லொறியால் குழந்தை உயிரிழப்பு !

You are currently viewing திடீரென வீட்டுக்குள் புகுந்த லொறியால் குழந்தை உயிரிழப்பு !

பெலவத்தையில் இருந்து தினியாவல நோக்கி தேயிலை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றில் புகுந்து விபத்திற்குள்ளாகியது.

இச் சம்பவத்தில் வீட்டிற்குள் இருந்த ஆறு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை,  குறித்த விபத்தில் லொறி சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளதாக தினியாவல பொலிஸார் தெரிவித்தனர்.

யட்டபான 9 அஞ்சல் பகுதியில் வசிக்கும் ஆதித்ய புன்சரா என்ற குழந்தையே விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த,  லொறியின் சாரதி மற்றும் உதவியார் மேகதன்ன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் தினியாவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments