தியாகி திலீபனின் நினைவு தாங்கிய ஊர்திப்பயணம் இம்முறையும் நடைபெறும்!!த.தே.ம.மு

You are currently viewing தியாகி திலீபனின் நினைவு தாங்கிய ஊர்திப்பயணம் இம்முறையும் நடைபெறும்!!த.தே.ம.மு
தியாகி திலீபனின் நினைவு தாங்கிய ஊர்திப்பயணம் இம்முறையும் நடைபெறும்!!த.தே.ம.மு 1

போலிச்சமாதானப்படைகளாக தமிழீழ மக்களின் விடுதலை வேணவாவை சிதைக்க வந்த இந்தியாவின் சதிகளை நன்கு அறிந்துகொண்ட திலீபன் அவர்கள் காந்தியத்தின் வழியில் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாள் நீராகாரமின்றிய அறவழிப்போராட்டத்தினை முன்னெடுத்து கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் தான்கொண்ட இலட்சியத்திற்காக உயிர் உருகி உருகி வீரச்சாவை தழுவிக்கொண்டார்.

33வது அவரின் தியாக நினைவுகளை எழுச்சியோடு முன்னெடுக்க உலகத்தமிழ்மக்கள் தயாராகி வரும் நிலையில் தாயகத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் கடந்த வருடம் போல் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி தியாகி திலீபனின் நினைவு தாங்கிய ஊர்திப்பயணம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள